உலக புகைப்பட தினத்தையொட்டி, நாகையில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்ற, அரிய புகைப்படங்கள் மாணவ-மாணவிகளை வெகுவாக கவர்ந்தன
Aug 19 2017 7:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக புகைப்பட தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இரண்டு நாள் புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்தக் கண்காட்சியில் மாணவ - மாணவிகள் எடுத்திருந்த 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், இயற்கைக் காட்சிகள், கோயில்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்காலத்தைச் சேர்ந்த அரியவகை புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், உதகையில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில், வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், வன விலங்குகள், பறவைகள், ஊர்வன உள்ளிட்ட உயிரினங்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.