திருச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டெருமை ஒன்று குழிக்குள் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது
Aug 19 2017 8:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருப்பரெட்டியப்பட்டி வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாத போது, இந்த காட்டெருமைகள் கிராமப் பகுதிக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேரிய காட்டெருமை ஒன்று, பிள்ளையார்கோவில்பட்டி என்ற கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது அங்குள்ள குழியில் விழந்த அந்த காட்டெருமை, வெகு நேரமாகியும் வெளியேற முடியாமல் தவித்துள்ளது. அதிகாலை வரை வெளிவர முடியாமல் தவித்த அந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த காட்டெருமையை மீட்டு, பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.