அரியலூர் அருகே ஏரியில் மண் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் - காவல்துறையினர் தடியடி
Aug 19 2017 8:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் அருகே ஏரியில் மண் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கிராமத்தில் உள்ள ஏரியில், வண்டல் மண் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை நீடித்து வந்தது. இந்நிலையில், தத்தனூர் கிராம மக்கள் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மற்றொரு பிரிவினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த காவல்துறையினர், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுதொடர்பாக நான்கு பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.