திருவண்ணாமலையில் தொடங்கியுள்ள புத்தகத் திருவிழா : புத்தகங்களை வாங்க புத்தக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வம்
Aug 19 2017 8:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலையில் தொடங்கியுள்ள புத்தகத் திருவிழாவில், புத்தக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கிரிவலப்பாதையில் புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில், பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில், புகழ்பெற்ற பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் புத்தகங்களும், கலை, இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், மருத்துவம், சமையல்கலை உள்ளிட்ட பிரிவுகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை ஏராளமான புத்தகப் பிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.