ரயில் டிக்கெட் பரிசோதகர் வீட்டில் 95 சவரன் நகைகள் கொள்ளை - பட்டப்பகலில் கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Aug 19 2017 8:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் ரயில் டிக்கெட் பரிசோதகர் வீட்டில் 95 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் முனுசாமி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் திரு. முத்துசாமி. ரயில்வேதுறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வரும் இவர், வழக்கம் போல் தனது வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 95 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 17 வயது பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், பெண்ணின் தாய் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

இதனிடையே, திருப்பூர் அருகே முறையான ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00