திருச்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரயில்வே ஊழியர், கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தன்னிலை விளக்களிக்க வந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு

Aug 19 2017 9:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் பார்சல் புக்கிங் அலுவலகத்தில் தியானேஸ்வரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ரயில்வே சீனியர் கோட்ட வணிக மேலாளர் அருண் தாமஸ், அரியலூர் ரயில் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, தியானேஸ்வரன் பணியில் இல்லை. இதன் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்க நேற்று திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள மேலாளரை சந்திக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்தும் அவர் அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பின்பு அழைக்கப்பட்ட அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிணத்தடன் கோட்ட அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்த பின்னர் அவரது உடலுடன் மருத்துவமனைக்கு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00