உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக தப்பிய 42 பயணிகள்

Aug 19 2017 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உளுந்தூர்பேட்டை டோல்கோட் அருகே இன்று அதிகாலை, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் திடீரென புகை வந்தது. இதனைக் கண்ட ஓட்டுனர், பேருந்தை நிறுத்திவிட்டு பின்புறம் சென்று பார்த்தபோது, பேருந்தில் தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். பேருந்து முழுவதிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00