விவசாயிகள் நலன் கருதி மறைந்த மாண்புமிகு அம்மா வழங்கி வந்த கடனுதவி சலுகைகள் திடீர் ரத்து : தமிழக அரசுக்கு கன்னியாகுமரி கூட்டுறவு சங்கங்கள் கடும் கண்டனம்
Aug 19 2017 10:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு அம்மா, விவசாயிகள் நலன் கருதி வழங்கி வந்த கடனுதவி சலுகைகளை திடீரென தமிழக அரசு ரத்து செய்து உள்ளதற்கு கன்னியாகுமரி கூட்டுறவு சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வருவாய் ஆவணம் எதுவும் இன்றி வாய்மொழி குத்தகை என்ற முறையில் பயிர்கடன் உதவிகளை வழங்க மறைந்த மாண்புமிகு அம்மா ஆணை பிறப்பித்திருந்தார். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு 220 கோடி ரூபாய் மதிபீலான கடனுதவிகள் வழங்கபட்டன. இந்த அரசாணையை தற்போது தமிழக அரசு ரத்து செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதற்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளை ஒன்றுதிரட்டி, போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.