பி.ஆர்க்., படிப்புக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடக்கம் - ஆயிரத்து 701 இடங்களுக்கு ஆயிரத்து 432 மாணாக்கர்கள் அழைப்பு
Aug 19 2017 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பி.ஆர்க் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. ஆயிரத்து 701 இடங்களுக்கு ஆயிரத்து 432 மாணாக்கர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
பி.ஆர்க் எனப்படும் கட்டடக் கலை படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிற மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரத்து 701 இடங்களுக்கு ஆயிரத்து 432 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.