அத்திக்கடவு - அவினாசி மாற்றுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென விவசாய சங்கத்தினர் கோரிக்கை
Aug 19 2017 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குளம், குட்டைகளில் நீரை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், பவானி ஆறு காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து மின் மோட்டார் மூலம் குழாய் வழியாக நீர் கொண்டு செல்லும் மாற்றுத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக ஆயிரத்து 516 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் எனவும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற கூட்டத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில், கீழ்பவானி விவசாய சங்கம், தடப்பள்ளி விவசாய சங்கம், காளிரங்கராயன் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.