சினிமா படப்பிடிப்புக்காக விதிகளை மீறி உதகைக்கு வந்த கேரவன் பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் : ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

Aug 19 2017 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

சினிமா படப்பிடிப்புக்‍காக விதிகளை மீறி உதகைக்‍கு வந்த கேரவன் பேருந்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விதிமீறலுக்‍காக ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்‍கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை வேல் வியூ பகுதியில் வட்டார போக்‍குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்த கேரவன் பேருந்தை சோதனையிட்டனர். அதன் ஆவணங்களை ஆய்வு செய்தபோது சொந்த வாகனத்தை போக்‍குவரத்து விதிகளை மீறி வாடகைக்‍கு பயன்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையில் இந்தி நடிகர் அஜய்தேவ்கனுக்‍காக உதகை, குன்னூர் பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் பயன்படுத்துவதற்காக இந்த வாகனம் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. விதியை மீறி வாகனத்தை பயன்படுத்தியதற்காக போக்‍குவரத்துத்துறை அதிகாரிகள் ஒருலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00