திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் யுகா அமைப்பு சார்பில் டெங்கு ஒழிப்பு மற்றும் மாநகர தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்
Aug 19 2017 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் யுகா அமைப்பு சார்பில் டெங்கு ஒழிப்பு மற்றும் மாநகர தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார். இப்பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவில் 6வது தூய்மை நகரமாக திருச்சிராப்பள்ளி விளங்குகிறது, தொடா்ந்து திருச்சியின் தூய்மையைப் பேணவும், பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்ப்பதோடு, இந்தியாவில் முதன்மை நகரமாக்கிட வேண்டும் என்ற முனைப்பில் தூய்மைப்பணியினை மேற்கொள்ளவும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்களை அகற்றிடவேண்டும் என்பதனை பொதுமக்களுக்கு வீடு, வீடாகச் சென்று பிரசுரங்கள் வழங்கி எடுத்துரைக்கும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் யுகா அமைப்பு சார்பில் மாசில்லா திருச்சி - மாற்றம் தேடி என்ற தூய்மை பிரச்சாரம் மற்றும் தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 42, 43வது வார்டுகளில் நடைபெறும் இந்த தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் திரு. கு.ராஜாமணி தொடங்கிவைத்து, டெங்கு கொசுவை ஒழிப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் திருச்சியை முதன்மை மாநகராக மாற்றுவோம் என்ற உறுதிமொழியினை வாசிக்க மாநகராட்சி ஊழியா்கள், கல்லூர் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில் மாநகராட்சி ஆணையர் திரு. ரவிச்சந்திரன், யுகா அமைப்பின் தலைவி அல்லிராணி பாலாஜி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.