திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக நிர்வாகியின் மறைவுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
Aug 19 2017 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக நிர்வாகியின் மறைவுக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க அம்மா துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் திருநெல்வேலி பகுதி 50-வது வட்ட கழகச் செயலாளர் திரு. எஸ். கோவிந்தன், சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று, மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
திரு. கோவிந்தனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு, கழகப் பொதுச்செயலாளர் சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.