புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் தனியார் வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயமானதால் பொதுமக்கள் முற்றுகை
Aug 19 2017 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயமானதால் பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பலர் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகையை திருப்ப வந்தவர்களிடம் நகையை கொடுக்காமல் வங்கி ஊழியர்கள் அலைக்கழித்தனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்ததில் சுமார் நான்கரை கிலோ தங்க நகைகள் மாயமானதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, வங்கியில் நகை அடகு வைத்த அனைவரும் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கீழ ராஜவீதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.