கன்னியாகுமரி கடல் பகுதியில் சஜாக் ஆப்ரேஷன் - தீவிரவாதிகளை கண்காணிக்க கடலோர காவல்படையினர் தீவிர ரோந்துப்பணி
Aug 23 2017 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க, கன்னியாகுமரி கடல் பகுதியில் ஆப்ரேஷன் சஜாக் என்ற ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. 24 மணிநேரம் இந்த ரோந்து ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து, நாடுமுழுவதும் கடல் பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், இந்த ரோந்துப் பணிகளில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஆப்ரேஷன் சஜாக் என்ற கண்காணிப்பு ஒத்திகை இன்று தொடங்கியது. 24 மணிநேரம் நவீன படகுகள் மூலம் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கடலோர காவல்படையினர், கேரள எல்லையான நீரோடி வரை 68 கிலோ மீட்டர் தூரம் கடல் மார்க்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத படகுகள் வந்தால், உடனடியாக தகவல் அளிக்குமாறு மீனவர்களுக்கு கடலோர காவல்படையினர் அறிவுறுத்தினர்.