பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பள்ளி சுவற்றில் மாணவ - மாணவிகள் வரைந்த ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது
Aug 23 2017 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பள்ளி சுவற்றில் மாணவ - மாணவிகள் வரைந்த ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போதுள்ள நவீன வாழ்வு முறைக்கு ஏற்ப அவர்களது வாழ்வாதார முறை மாறி வருகிறது. இந்நிலையில், அவர்களது பண்டைய கலாச்சாரத்தை பாதுக்காக்கும் வகையில் தேவாலாவில் இயங்கி வரும் அரசு பள்ளியின் சுவற்றில் மாணவ - மாணவிகள், கண்களை கவரும் வகையில் ஓவியங்களை வரைந்துள்ளனர். பண்டைய கால பழங்குடியின மக்கள் பயன்படுத்திய பொருட்கள், கலை, உணவுமுறை, தோட்டங்களில் வளர்க்கப்பட்ட விவசாய பயிர்கள் போன்றவற்றை தத்ரூபமாக வரைந்துள்ளனர். மாணவர்கள் தீட்டிய இந்த ஓவியம் ஆசிரியர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.