விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் குடோனை முற்றுகையிட்டதால் பரபரப்பு
Aug 23 2017 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் குடோனை முற்றுகையிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கொம்மசமூத்திரம் கிராமத்தில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். இருப்பினும், கொம்மசமூத்திரத்தில் கடை திறப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆத்திரமடைந்த அவர்கள், டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் மேலாளர் கிராம மக்களிடம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.