களைகட்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை - சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம் - தோவாளை சந்தையில் குவிந்துள்ள வண்ண மலர்கள்
Aug 24 2017 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை ஆகியவற்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தோவாளை பூச்சந்தையில் பூக்களின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூச்சந்தைக்கு, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டும், கேரளாவில் ஓணம் பண்டிகையின் முதல்நாள் நாளை தொடங்கவிருப்பதையொட்டியும், தோவாளை பூச்சந்தை களைகட்டியுள்ளது. பிச்சி, மல்லி, ரோஸ், கனகாம்பரம், அரளி, சம்பங்கி உள்ளிட்ட பல வகை பூக்கள் குவிந்துள்ளன. இதனை வாங்க உள்ளூரில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். வழக்கத்தைவிட விலையும், விற்பனையும் அதிகரித்துள்ளதால் பூ விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.