ஏழைப்பெண்களின் திருமணக் கனவை நனவாக்கும் வகையில் மறைந்த மாண்புமிகு அம்மா செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டத்தை முடக்கும் ஆட்சியாளர்கள் - பொதுமக்கள் கண்டனம்
Sep 24 2017 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு அம்மா, ஏழைப்பெண்களின் திருமணக் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டத்தை, தற்போதைய அரசு கிடப்பில் போட்டுள்ளதற்கு பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏழைப்பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், மறைந்த மாண்புமிகு அம்மா எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அவற்றில் திருமண உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் என்ற உன்னத திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்.
மாண்புமிகு அம்மாவின் திட்டம் ஒவ்வொன்றையும் கிடப்பில் போட்டு வரும் தற்போதைய அரசு, பெண்களின் திருமண கனவுத் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை கண்டுகொள்ளாமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ள போதிலும், அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசு இழுத்தடித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர். வளைகாப்புகூட முடிந்துவிட்ட நிலையில், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை எதிர்பார்த்து ஏராளமான பெண்கள் காத்துக்கிடக்கின்றனர்.