தொடர்ந்து ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் சிரசாசனம் செய்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சித்த மருத்துவமனை பணியாளர் கின்னஸ் சாதனை
Sep 29 2017 2:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சித்த மருத்துவமனை பணியாளர் ஒருவர் தொடர்ந்து ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் சிரசாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் திரு. சங்கரன். சித்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர், அங்கு நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவருக்கான பிரிவு யோகாப் போட்டியில் பங்கேற்றார். அதில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரசாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை படைத்த திரு. சங்கரனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார் உட்பட பொதுமக்கள் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.