தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா : 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Oct 16 2017 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கட்டிட, சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்க கூடிய தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரியகோவிலில் வெகு விமர்சியாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் 1032-வது சதய விழா வரும் 29ம் மற்றும் 30ம் ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் 30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.