மெர்சல் திரைப்படத்திற்கு தடையில்லா சான்று வழங்கியது : விலங்குகள் நல வாரியம்
Oct 16 2017 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் மெர்சல் திரைப்படத்திற்கு, தடையில்லா சான்று வழங்கியது விலங்குகள் நல வாரியம். இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் மெர்சல் திரைப்படம் வெளியாக எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளியை யொட்டி வெளியாக உள்ளது. இப்படத்தில் விலங்குகளை துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விலங்குகள் நலவாரியம் திரைப்பட தணிக்கை குழுவிடம் புகார் அளித்திருந்தது.
இந்த புகார் தொடர்பாக சென்னை திருவான்மியூரில் உள்ள வாரிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட தணிக்கை குழுவின் சென்னை மண்டல அதிகாரி திரு. மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகளும், விலங்குகள் நல வாரிய அதிகாரிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இந்தக்கூட்டத்தில் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வுக்கு பின்னர், மெர்சல் திரைப்படம் வெளியாக எந்த தடையும் இல்லை என்று, தடையில்லா சான்று வழங்க விலங்குகள் நல வாரியம் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதனால், திரைப்படம் வெளியாக இருந்த அனைத்து தடைகளும் நீங்கியதை அடுத்து, திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.