கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழியில் செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, டெங்கு நோயைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட, நகர, பகுதி, ஒன்றிய மற்றும் கிளைக்கழகங்கள் சார்பில், கழகத் தொண்டர்கள் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழியில் செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், செல்லூர், ஆரப்பாளையம், ஜீவாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், மாணவ - மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. ம. ஜெயபால் உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கழக செயலாளர் திரு. இரா. ஹென்றி, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் திரு. பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றிய கழகம் சார்பில் குன்னம் கடை வீதியிலும், ஆலத்தூர் கேட் ஒன்றிய கழகம் சார்பில் பாடாலூர் கடை வீதியிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி சாறு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழகத்தினர் திரளாக பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
தேனி மாவட்டம் கூடலூர் நகர கழகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு வழங்கப்பட்டது. இதில் நகர கழக செயலாளர் திரு. அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி கழகம் சார்பில், பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மொளச்சூர் பெருமாள் உட்பட கழகத்தினர் பலர் பங்கேற்றனர்.
இதேபோல், கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கரிகாலன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி சாறு வழங்கினார். இதில் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் திருநின்றவூர் பேரூராட்சி கழகம் சார்பில், டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்தும் வகையில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு. திருவேற்காடு சீனிவாசன், பேரூராட்சி கழக செயலாளர் திரு. நிர்மல் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் லால்குடியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, கழக அமைப்புச் செயலாளரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. ஆர். மனோகரன் நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. சி.சண்முகவேலு பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி 30-வது வார்டு அ.இ.அ.தி.மு.க. அம்மா சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.டி. கலைச்செல்வன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.