ஈரோட்டில் கைத்தறி தொழிலை நஷ்டத்தில் தள்ளிய தமிழக அரசுக்கு பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை : கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் தகவல்

Oct 16 2017 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி தொழிலை நஷ்டத்தில் தள்ளிய தமிழக அரசுக்கு பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை என கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 சதவிகித நெசவுத்தொழில் நசிந்தது. தற்போது மத்திய அரசு இத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் முற்றிலும் பாதிப்படைந்து தொழிலை கைவிட்டுள்ளனர். இதனால் மாதம் முழுவதும் தொழில் செய்து வந்த நிலையில் தற்போது 10 நாட்கள் மட்டுமே தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி குறைவு காரணமாக, இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் வேலையிழந்துள்ளனர். வருமானம் இல்லாததால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நெசவுத் தொழிலை நஷ்டத்தில் தள்ளிய தமிழக அரசுக்கு பாடம் புகட்டும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்றும் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00