நீலகிரியில் 2-வது நாளாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி : பல்வேறு வகையான நாய்கள் பார்வையாளர்களை கவர்ந்தன
Oct 16 2017 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற பல்வேறு வகையான நாய்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட், மினியேச்சர், பின்ச்சர், அமெரிக்கன் காக்ராஸ், ஸ்பார்மர், ராஜபாளையம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இந்த நாய்களுக்கு அணிவகுப்பு, கீழ்படிதல், மோப்ப சக்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.