பொதுமக்களிடையே டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தியும் சாத்தூரில் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் பிரச்சாரம்
Oct 16 2017 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்களிடையே டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஸ்கேட்டிங் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகர காவல்நிலையத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியை சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். இதில், 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். டெங்கு ஒழிப்பு, விபத்தில்லா தீபாவளி மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசுரங்களை அவர்கள் வழங்கினர்.