சீர்காழியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து : 8 வீடுகள் எரிந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Oct 16 2017 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீர்காழியில் மின்கசிவு காரணமாக நிகழ்ந்த தீவிபத்தில் 8 வீடுகள் எரிந்து, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
நாகை மாவட்டம் சீர்காழியில் நகர் பகுதியில் ஈசானிய தெருவில் வசித்து வரும் சண்முகம் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிக காற்றின் காரணமாக தீ அருகில் இருந்த 8 பேரின் கூரை வீடுகளின் மீது தீ பரவியது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்ற வீடுகளலுக்கும் தீ பரவாமல் இருக்க போராடி தீயை அணைத்தனர். அதிகாலை நேரம் என்பதாலும், மின்சாரம் தடைபட்டதாலும் தங்களது உடைமைகளை காப்பாற்ற முடியாமல் மக்கள் உயிர் தப்பித்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தீவிபத்து குறித்து சீகாழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.