திருவைகுண்டம் அணையில் இருந்து வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
Oct 17 2017 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணையில் இருந்து வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதி விவசாயத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதாக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை திருவைகுண்டம் அணைகட்டு வடகால் பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை என கூறி ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.