மவுசு குறையாத தென்மாவட்ட தீபாவளி இனிப்பு வகைகள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்
Oct 17 2017 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இனிப்புகளின் தயாரிப்புகளும், விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகளில், தென்மாவட்டங்களில் தயாராகும் இனிப்பு வகைகளுக்கு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் தூத்துக்குடியில் இந்த ஆண்டும் வழக்கம்போல் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு மும்முரமாக விற்பனையாகி வருகின்றன. அங்குள்ள இனிப்பு கடைகளில் விதவிதமானஇனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தயாரிப்புப் பணியில் இரவு பகலாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய் லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாகு, நெய் அல்வா, பாதாம் பர்பி, அதிரசம் மற்றும் முறுக்கு வகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட இனிப்புகளும், கார வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.