அ.இ.அ.தி.மு.க அம்மா பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா மேலான ஆணையின்படியும், கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பின்படியும், கழகத்தின் 46-வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் அமைப்பான அ.இ.அ.தி.மு.க. 46-வது ஆண்டு துவக்கவிழாவை எழுச்சியுடனும் உற்சாகத்துடன் கொண்டாடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் மறைந்த மாண்புகு முதலமைச்சர் அம்மா ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி, கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் லால்குடியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவச்சிலைக்கு கழக அமைப்புச்செயலாளரும், திருச்சி வடக்குமாவட்டகழக செயலாளருமான ஆர்.மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழக கொடியினை ஏற்றிவைத்து, ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் பெருந்திரளான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள அமரர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு நெல்லை மநாகர் மாவட்ட கழகம் சார்பில் அவைத் தலைவர் திரு.பொய்கை மாரியப்பன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலாளர்கள் திரு.ஆர்.பி.ஆதித்தன், திரு.கல்லூர்வேலாயுதம், மாநகர் மாவட்ட தகவல்தொழில்நுட்பபிரிவு செயலாளர் திரு.எம்.சி.ராஜன், முன்னாள் துணைமேயர் திரு.ஜெகநாதன், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி சந்திப்பில் உள்ள நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் திருபச்சைமால் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவுச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இதில் கழக் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் நகரக் கழகம் சார்பில் மருதூரில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் நகர கழகச் செயலாளர் திரு.சண்முகம், வடக்கு மாவட்டக் கழகச் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு. ஷாகுல் அமீது உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் மடப்பட்டு கூட்டுரோட்டில் கழக கொடியினை, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கே.ஜி.பி. ஞானமூர்த்தி ஏற்றிவைத்து பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் திருவுருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை மாநகர மாவட்டக் கழகம் சார்பில், கே.கே.நகா் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள், மாவட்ட நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள அமரர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதனைத் தொடர்ந்து, கழகத்தின் பல்வேறு பிரிவுகளின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் கழகத்தையும், சின்னத்தையும் மீட்டெடுப்போம் என உறுதிமொவி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடியில் மாவட்டக் கழகம் சார்பில், பழைய மாநகராட்சியில் உள்ள அமரர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்டச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில், மாவட்டச் செயலாளர் திரு. சந்திரமவுலி தலைமையில், உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த அமரர் எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.