தமிழக மக்கள் அனைவருக்கும் கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீபாவளி நல்வாழ்த்து : அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி பெருகவேண்டும் என விருப்பம்
Oct 17 2017 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில், தமிழக மக்கள் அனைவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ''அம்மா'' துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், தீபாவளித் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மண்டிக்கிடக்கும் இருளை, மக்கள் ஏற்றிவைக்கும் ஒளி அழித்துவிடுகிறது - அதேபோல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை அழித்து, அறிவொளி ஏற்றவேண்டும் என்பதே தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் -
தனி மனிதன் வாழ்வில் இன்ப ஒளி நிறைந்தால் மட்டும் போதாது - சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் - தீபாவளி என்பது ஏழைகளுக்கும் கைக்கெட்டும் கனியாக சிறந்து விளங்கவேண்டும் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீபாவளி நன்னாளில் அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி ஆகியவை பெருகவேண்டும் என்ற அவாவினை தெரிவித்து, தமதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில் உளமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்வதாக கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.