தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் - தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் பீதி

Oct 23 2017 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு போன்ற தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இம்மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஆயிரத்து 117 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் பொட்டல் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் டெங்கு நோய் அறிகுறியுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியிருந்த நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த பாண்டூர் பகுதியில் டெங்கு நோய் தாக்கி 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆசாத் நகர் 2வது தெருவைச் சேர்ந்த முகம்மது சலீம் என்பவரின் 5 வயது மகன் முகம்மத் எஹியா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாமாக உயிரிழந்தான். நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்கெனவே குப்பைகள் தேங்கியுள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்த நிலையிலும், குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் ஆனைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் சுதர்சன் என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் முற்றிய நிலையில், மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு, நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார். கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டி காலம் தாழ்த்தியதால் தான் சுதர்சன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00