4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடிக்கு தண்ணீர் வரும் கொங்கன் வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தல் - கும்பகோணத்தில் கருப்புக்கொடி ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Oct 23 2017 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் பகுதியில், சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடிக்கு தண்ணீர் வரும் கொங்கன் வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கருப்புக்கொடி மற்றும் தேசியக்கொடியினை ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் பகுதியில் காவிரியாற்றில் இருந்து தொடங்கும் கொங்கன் வாய்க்கால், உத்திரை கிராமம் வரை சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயாக உள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் பாபநாசம், அருமைப்பட்டி, ஓலைப்பாடி, ஆதனூர், பாதிரிமேடு உள்ளிட்ட 15 கிராமங்களில் மின்மோட்டார் உதவியுடன் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துள்ளன.
இந்த வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கக்கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள், இன்று கொங்கன் வாய்க்கால் கரையில் கையில் கருப்புக்கொடி மற்றும் தேசியக்கொடியினை ஏந்தி, தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.