கழகத்தின் 46-வது தொடக்க விழாவையொட்டி சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு, கழக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை
Oct 22 2017 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகத்தின் 46-வது தொடக்க விழாவையொட்டி சென்னை குமணன்சாவடியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு, கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கமான அ.இ.அ.தி.மு.க.வின் 46-வது ஆண்டு தொடக்கவிழாவை தமிழகம் முழுவதும் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி நகர கழகம் சார்பில், கழகத்தின் 46-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.ஏ. ஏழுமலை, கழக மாணவரணி செயலாளர் திரு. பொன். ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர கழக செயலாளர் திரு.து. கந்தன் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.