கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் பழமையான சாணியடி திருவிழா : ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசியெறித்து விநோத வழிபாடு
Oct 22 2017 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோபிசெட்டிபாளையம் அருகே மிகவும் பழமையான சாணியடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசியெறித்து விநோத வழிபாடு மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள குமிட்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்துவரும் மூன்றாவது நாள் சாணியடி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா கடந்த சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து கோவில் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை பக்தர்கள், ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.
இந்த பாரம்பரிய விழாவை ஏராளமான பெண்கள் கண்டு ரசித்தனர். இதனையடுத்து பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.