தங்களுக்குதான் சின்னம் கிடைக்கும் என தேதி முதற்கொண்டும், யாருடைய ஆதரவோடு கிடைக்கும் என்றும் பட்டவர்த்தனமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய காட்சி
Nov 24 2017 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே கடந்த மாதம் 20 ஆம் தேதி பெரியகுளத்தில் பேசியதில் இருந்தே திட்டமிட்டு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது வெளிப்படையாகி இருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது, இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் ஒதுக்கப்படும் என்றும், எல்லாவற்றையும் மேலே இருப்பவர் பார்த்துக் கொள்வார் என்றும், அவர் இருக்கும் போது யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராஜேந்திர பாலாஜி பேசியதில் இருந்தே திட்டமிட்டு ஒருதலை பட்சமாக சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. தங்களுக்குதான் சின்னம் கிடைக்கும் என தேதி முதற்கொண்டும், யாருடைய ஆதரவோடு கிடைக்கும் என்றும் பட்டவர்த்தனமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிப்படுத்தினார்.