ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலோடு போட்டியிடும் கழக துணைப் பொதுச்செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு. டிடிவி தினகரன், 8-வது நாளாக நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பணம் கொடுத்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணியினரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும், அவர்களுக்கு, ஆர்.கே.நகர் மக்கள், தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பண விநியோகம் செய்தபோது, படம்பிடிக்கச் சென்ற ஜெயா டிவி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீதும், அமைதியான முறையில் வாக்கு சேகரித்த கழகத் தொண்டர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணியினருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கழக துணை பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில், 8-வது நாளாக நேற்று, எழில்நகரில் உள்ள ஸ்ரீ தொப்பை விநாயகர் திருக்கோயிலில் பிரார்த்தனை நடத்திவிட்டு தனது பிரச்சாரத்தை அவர் தொடங்கினார்.
எழில் நகர் B பிளாக் பகுதிக்குட்பட்ட 1-வது தெரு, 2-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில், தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட திரு. டிடிவி தினகரன், வெற்றிச் சின்னமாம் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார். பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, எழில்நகர் A பிளாக் பகுதியில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திரு. டிடிவி தினகரனுக்கு கழகத் தொண்டர்கள் மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க நினைக்கும் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணியினரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். தோல்விபயம் காரணமாக ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணியினர் பணம் விநியோகம் செய்ததை படம் பிடிக்கச் சென்ற ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சல்மான் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அன்னை சத்யா நகருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திரு. டிடிவி தினகரன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரணகும்ப மரியாதை வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராஜா-இந்திரா தம்பதியினரின் பெண் குழந்தை மற்றும், சுரேஷ்-செண்பகம் தம்பதியினரின் பெண் குழந்தை ஆகியோருக்கு 'ஜெயலலிதா' என்று திரு டிடிவி தினகரன் பெயர் சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திரு. டிடிவி. தினகரன் வெற்றிச் சின்னமாம் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார். செல்லும் இடமெல்லாம் வெற்றிச் சின்னமாம் பிரஷர் குக்கர் சின்னத்திற்கே தங்கள் வாக்கு என்றும், திரு. டிடிவி தினகரனை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெறச் செய்வோம் என்றும் வாக்காளர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.