ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த ஆவடிகுமார் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகார் : புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மாற்றம்
Dec 15 2017 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த ஆவடிகுமார், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றபோது ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர் ஆவடிகுமாரை தொகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அவரது காரை சோதனை செய்யாமல் காவலர்கள் தப்பிக்கச் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், ஆர்.கே.நகர் தொகுதியில் அனுமதியில்லாமல் வந்த ஆவடிகுமார் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.