ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தோல்வி பயம் காரணமாக, இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணியினர், வாக்காளர்களுக்கு ஸ்கூட்டி வழங்க விண்ணப்பம் விநியோகம் - ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் பிரத்யேக வீடியோ காட்சிகள்
Dec 17 2017 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தோல்வி பயம் காரணமாக, இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணியினர், வாக்காளர்களுக்கு ஸ்கூட்டி வழங்க விண்ணப்பம் விநியோகித்துள்ளனர். தங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே ஸ்கூட்டி கிடைக்கும் என வாக்காளர்களை மிரட்டுவதோடு, தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் ஒப்புதலோடு போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான திரு. டிடிவி தினகரனுக்கு, நாளுக்கு நாள் பொதுமக்களின் பேராதரவு அதிகரித்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்பினர், தோல்வி பயம் காரணமாக, தொடர்ந்து வன்முறையிலும், அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்தொடர்ச்சியாக, தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்பினர், வாக்காளர்களுக்கு ஸ்கூட்டி வழங்க விண்ணப்பம் விநியோகித்துள்ளனர். மேலும், தங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே ஸ்கூட்டி மானிய விலையில் கிடைக்கும் என வாக்காளர்களுக்கு ஆசை காட்டியும், விண்ணப்பத்தை வாங்க மறுப்பவர்களை மிரட்டியும் வருகின்றனர். தொடர்ந்து அதிகார துஷ்பிரயேகம் செய்யும் பிரத்யேக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.