ஆர்.கே.நகர் தொகுதியில் கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான டிடிவி தினகரன் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரம் - ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து டெபாசிட் வாங்க இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணியினர் துடிப்பதாக குற்றச்சாட்டு

Dec 17 2017 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், 9-வது நாளாக நேற்று அத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தண்டையார்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்து டெபாசிட் வாங்க இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணியினர் முயற்சி செய்வதாகவும், அவர்களே பணப்பட்டுவாடா செய்து விட்டு தங்கள் மீது பழி போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலுடன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நேற்று 9-வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தண்டையார்பேட்டை கிரகலட்சுமி அப்பார்ட்மெண்ட் பகுதிக்கு வந்தபோது, அவருக்கு, பொதுமக்களும், தொண்டர்களும் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அத‌னைத்தொடர்ந்து, தாண்டவராயன் தெருவில் உள்ள, அருள்மிகு தணிகை சுப்பிரமணியர் திருக்கோயிலில், கழக துணைப்பொதுச் செயலாரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன் பிரார்த்தனை மேற்கொண்டார்.

அதைத்​‌தொடர்ந்து, தாண்டவராயன் தெருவில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களிடம் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாச‌‌த்‌தில் தன்‌னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவருக்கு பொதுமக்களும், கழக தொண்டர்களும் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர், கணக்கர் தெருவிற்குள் வந்த கழக துணைப்பொதுச்செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பிரஷர் குக்கர் சின்னத்திற்கே தங்களின் வாக்கு என உறுதி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து பிள்ளையார் கோவில் தெருவில் கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன், அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். வழிநெடுகிலும் கழக தொண்டர்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பிள்ளையார் கோவில் தெருவில் பொது மக்களிடம் வாக்குசேகரித்த வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணியினர் ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்து டெபாசிட் வாங்க முயற்சி செய்வதாகவும், அவர்களே பணப்பட்டுவாடா செய்துவிட்டு தங்கள் மீது பழி போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பிள்ளையார் கோவில் தெருவில் வாக்குசேகரித்த கழக துணைப் பொதுச்செயலாளரும் வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனுக்கு பொதுமக்களும், கழக தொண்டர்களும் மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து கும்மாளம்மன் கோவில் தெருவில் திரண்டிருந்த பொதுமக்களிடம், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் துரோகிகளின் அராஜக நடவடிக‌்கைகள் குறித்து எடுத்துரைத்து, பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

தண்டையார் நகர் 1வது தெருவில் கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனுக்கு, செல்லும் வழியெங்கும், வாக்காளர்கள் தங்கள் வாக்கு பிரஷர் குக்கர் சின்னத்திற்கே என உறுதிபடத் தெரிவித்தனர்.

தண்டையார் நகர் 2-வது தெருவில் பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன், துரோக ஆட்சியை வீழ்த்தவும், அடிப்படை வசதிகளை செய்து தர மீண்டும், அம்மா விட்டுசென்ற பணிகள் அனைத்தும் செய்திட பிரஷர் குக்கர் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்கள‌ிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் விநாயகபுரத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு‍சேகரித்தார். அங்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனுக்கு திரண்டிருந்த பொதுமக்களும், ​தொண்டர்களும் வாழ்த்து முழக்கம் எழுப்பி, மலர்கள் தூவி வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து தண்டையார் நகர் 3வது தெருவில் வாக்கு சேகரித்தார். பின்னர், தண்டையார் நகர் மெயின் சாலையில் வாக்காளர்களிடம் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கே‌ட்டுக்கொண்ட கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனிடம், பிரஷர் குக்கர் சின்னத்திற்கே தங்களின் வாக்கு என வாக்காளர்கள் உறுதியளித்தனர்.

அதைத்தொ‌டர்ந்து விநாயகபுரம் மெயின் சாலையில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். வழிநெடுகிலும் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

தொடர்ந்து, திரு. டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒத்தவாடை தெரு, பல்லவன் நகர், திடீர் நகர், பாலகிருஷ்ணா தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரஷர் குக்கர் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00