தூத்துக்குடியில் ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Dec 16 2017 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒக்கி புயலின் போது, காணாமல் போன மீனவர்கள் பட்டியலை அரசு வெளியிட வேண்டும், அவர்களைத் தேடும் பணியினை அரசு துரிதப்படுத்த வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.