தஞ்சையில் தனியார் நிறுவன ஆட்டோவை தடைசெய்ய வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Dec 16 2017 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய வகையில் பன்னாட்டு நிறுவனத்தின் தனியார் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடியாக மத்திய-மாநில அரசுகள் தனியார் நிறுவன ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 200க்கும் மேற்ப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.