பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கு புதிய அறிவிப்பாணை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Dec 16 2017 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 3 ஆயிரத்து 456 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்‍குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் 40 முதல் 70 சதவீத குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்‍க வேண்டும் என்றும், 3 சதவீத இடஒதுக்‍கீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்‍கான சங்கம் சார்பில் தாக்‍கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, 100 சதவீதம் ஊனம் இருந்தாலும் பணிகளுக்‍கு விண்ணப்பிக்‍கலாம் என்ற அரசாணை தாக்‍கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்‍கான 4 சதவீத ஒதுக்‍கீட்டு இடங்களான, 140 இடங்களுக்‍கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டு 3 மாதங்களுக்‍குள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00