ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணைய விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் : சென்னை வந்த செலவினப் பார்வையாளர் பேட்டி
Dec 17 2017 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை மேற்பார்வையிட தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள செலவினப் பார்வையாளர் விக்ரம் பத்ரா இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் குறித்து புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிகாரிகளுடனும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக சென்னை வந்த விக்ரம் பத்ராவை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் வரவேற்றனர்.