ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் பணப்பட்டுவாடா : பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
Dec 17 2017 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் ஆதரவாளர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி, 43வது வார்டு, தண்டையார் நகர் மெயின் தெருவில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் ஆதரவாளர் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம், வீடு வீடாகச் சென்று வழங்கியபோது, பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.