ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட சாஸ்திரி நகர் 38-வது வட்டம் கருணாநிதி தெருவில் பணம் விநியோகம் செய்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினர் கையும், களவுமாக பிடிப்பட்டனர் : காவல்துறை வாகனத்தை ஓ.பி.எஸ். அணியினர் செல்லவிடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு
Dec 16 2017 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட சாஸ்திரி நகர் 38-வது வட்டம், கருணாநிதி தெருவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியை சேர்ந்த, தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஜாபர் என்பவர் உட்பட 2 பேர், ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த போது, கழகத்தினர் கையும், களவுமாக பிடித்தனர். அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காவல்துறை வாகனத்தை ஓ.பி.எஸ். அணியினர் முற்றுகையிட்டு தாக்கி செல்லவிடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.