ஜெயா தொலைகாட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதற்கு அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் - கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து செய்தியாளர்களின் உரிமையை மீட்டு தர தமிழக காவல்துறைக்கு அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தல்
Dec 18 2017 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா தொலைகாட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் தாக்கப்பட்டதற்கு அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒபிஎஸ்-இபிஎஸ் அணியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாட செய்து கொண்டிருந்தனர். அப்போது அதனை படம் பிடித்த ஜெயா தொலைகாட்சி நிருபர் பத்மநாபன், ஒளிப்பதிவாளர் மோகன் உள்ளிட்டோர் ஜெயா தொலைகாட்சி மூலம் பொதுமக்களுக்கு உண்மை தன்மையை காண்பிக்க முயற்சித்தபோது ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவத்திற்கு அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கை, கால், தலை, முதுகு உள்ளிட்ட பகுதியில் பலத்தகாயமடைந்த செய்தியாளர் பத்மநாபனை கண்மூடிதனமாக தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து செய்தியாளர்களின் உரிமையை மீட்டு தர தமிழக காவல்துறைக்கு அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.