மாணவர்களின் கற்கும் திறனை ஒருமுகப்படுத்தும் புதிய கருவி : தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் கண்டுபிடித்து சாதனை
Dec 24 2017 8:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் காது கேளாதவர்கள் பயன்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கற்கும் திறனை ஒருமுகப்படுத்தும் நோக்கிலும், புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் என்ற பொறியாளர், காதுகேளாதவர்கள் மற்றும் மாணவர்களின் கற்கும் திறனை ஒருமுகப்படுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி ஒலி அலைகளை அதிர்வலைகளாக மாற்றி மூளை நரம்புகளை வேகமாக சென்றடைவதால், மாணவர்கள் ஒருமுகத்தன்மை அதிகரிப்பதாக தெரிகிறது. இவர் கண்டுபிடித்த இந்த கருவியினை இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ், நெல்லை அறிவியல் மையம் ஆகியவை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. பொறியாளர் முருகன் ஏற்கெனவே வாழை நாரை பிறித்தெடுக்கும் கருவி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கருவி போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.