திண்டுக்கலில் டீ கிளாஸ் மீது ஏறி நின்று 30 விநாடிகளில் 50 தண்டாள்கள் எடுத்து யோகா பயிற்சியாளர் சாதனை
Dec 29 2017 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கலில் டீ கிளாஸ் மீது ஏறி நின்று 30 விநாடிகளில் 50 தண்டாள்கள் எடுத்து யோகா பயிற்சியாளர் ஒருவர் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
திண்டுக்கல் முகமதியார்புரம் பகுதியை சேர்ந்தவர் திரு. அப்துல்ரகுமான். தனியார் பள்ளியில் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வரும் அவர், டீ கிளாஸ் மீது ஏறி நின்று 30 விநாடிகளில் 50 தண்டாள்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற அவரை பாராட்டி, கேடயம் வழங்கப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திரு. பாஸ்கரன் என்பவர், டீ கிளாஸ் மீது ஏறி நின்று 30 விநாடிகளில் 35 தண்டாள்கள் எடுத்து சாதனை படைத்ததை, தற்போது திரு. அப்துல்ரகுமான் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.