நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பேருந்து வராததால், பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பேருந்துகளை முற்றுகையிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
Jan 20 2018 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மணல்மேடு செல்லும் நகர பேருந்து 2 மணி நேரமாக வராததால் பேருந்திற்காக காத்திருந்த மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல்வேறு குக்கிராம மக்களுக்கு வசதியாக இயக்கப்படும் இந்த பேருந்தை நம்பி நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். மாலை 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து இரவு 7 மணி வரை வராததால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பேருந்து நிலையத்திலிருந்த மற்ற பேருந்துகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை கைது செய்து தனியார் மினிபேருந்து மூலம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.