நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பேருந்து வராததால், பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பேருந்துகளை முற்றுகையிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு

Jan 20 2018 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மணல்மேடு செல்லும் நகர பேருந்து 2 மணி நேரமாக வராததால் பேருந்திற்காக காத்திருந்த மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்‍குள்ளாகினர். பல்வேறு குக்‍கிராம மக்‍களுக்‍கு வசதியாக இயக்‍கப்படும் இந்த பேருந்தை நம்பி நூற்றுக்‍கணக்‍கான மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்‍கு சென்று வருகின்றனர். மாலை 5 மணிக்‍கு வரவேண்டிய பேருந்து இரவு 7 மணி வரை வராததால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பேருந்து நிலையத்திலிருந்த மற்ற பேருந்துகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், நூற்றுக்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை கைது செய்து தனியார் மினிபேருந்து மூலம் காவல்நிலையத்துக்‍கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00